எங்கள் பிள்ளைகள் இருக்கா இல்லையா அரசாங்கம் உடனடியாக பதில் தரவேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

419 0

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று பதில் கூறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 134   ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு அரசாங்கம் எவ்வாறான பதிலை வழங்கப்போகின்றது என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக தமது பிள்ளைகள் இருக்கிறார்களா இல்லையா அவர்களுக்கு என்ன நடந்தது என்றபதிலை தரவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.  

Leave a comment