விமல் உள்ளிட்ட குழுவினர் விலகுவதாக அறிவிப்பு

274 0

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கான குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் ஐந்து பேர் சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளனர்.

அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, நிரோஷன் பிரேமரத்ன மற்றும் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோரே இவ்வாறு புதிய அரசியலமைப்புக்கான குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

Leave a comment