புத்தரின் உருவம் பொறித்த உடையணிந்த இந்தியப் பெண்ணுக்கு பொலிஸார் எச்சரிக்கை

290 0

புத்தருடைய உருவம் பொறிக்கப்பட்ட உடையணிந்த நிலையில் இருந்த இந்தியப் பெண் ஒருவர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

புத்த பெருமானுடைய உருவங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிவது மற்றும் அலங்கார பொருட்களை தயாரிப்பது போன்று பொருத்தமற்ற இடங்களில் புத்தர் சிலையை வைப்பது உள்ளிட்டவை இலங்கையில் தண்டனைக்குறிய குற்றமாகும்.

கடந்த 2014ம் ஆண்டு இதுபோன்று புத்தருடைய உருவத்தை மேனியில் வரைந்திருந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் நாடுகடத்தப்பட்டிருந்தார்.

26 வயதுடைய குறித்த இந்தியப் பெண் விடுமுறைக்காக இலங்கை வந்து பெந்தொட்ட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதுடன், கொழும்பில் உள்ள வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றில் வைத்து பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a comment