கீரிமலையில் மீனவத் துறைமுகம் அமைக்கும் எண்ணம் இல்லை – அரசாங்கம்

332 0

mahinda-amaraweera1யாழ்ப்பாணம் கீரிமலையில் மீனவதுறைமுகம் அமைக்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கீரிமலையில் மீனவ துறைமுகம் அமைக்கப்பட உள்ளதாக வெளியாக தகவலை அடுத்து, வட மாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் இந்த தகவலில் உண்மை இல்லை. அரசாங்கம் பருத்திதுறையிலும் குருநகரிலும் மீனவ துறைமுகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.