அரசு முன்வைத்துள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு

252 0

அரசாங்கம் முன்வைத்துள்ள குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 148.8 மில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணைக்கு அனுமதி கோரி கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தப் பிரேரணையை அரசு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment