பதுளையில்  17 பேர் கைது

238 0

பதுளை நகரில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 11 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணி முதல் 4 மணிநேரம் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, நகருக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 8 பேர் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment