உமாஓயவுக்கு நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

244 0

உமாஓயவுக்கு நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

38 வயதான தாய், 87 வயதான பாட்டி மற்றும் இரண்டரை வயதான குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஊவா – பரணகம – மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இவர்களின் உடலங்கள் இதுவரையில் மீட்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment