காணாமல் போனவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம் – சம்பந்தன்

336 0

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 143 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோர் உறவினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், காணாமல் போனோர் விடயத்தில் இனிவரும் காலத்தில் அரசாங்கத்திடம் கடுமையாக முன்னிற்கவிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை மாத்திரம் இல்லாமல் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாக மகிந்த ஆட்சி காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.

தற்போது சில விடயங்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

ஆனாலும் அவற்றில் பல்வேறு தாமதமும் குழப்பங்களும் தொடர்கி;றன.

எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a comment