காணாமல்போனோர் அலுவலகம் இதுவரை அமைக்கப்படாதது கவலையளிக்கின்றது- கனேடிய தூதுவர் (காணொளி)

404 0

 

காணாமல்போனோர் அலுவலகம் இதுவரை அமைக்கப்படாதது கவலையளிக்கின்றது என பணியை முடித்து செல்லும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் தெரிவித்துள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பணியை முடித்து செல்லும் இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும், வடக்க முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

Leave a comment