“இரு வாரங்­களில் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுவார் ஞான­சார தேரர்”

551 0

பொது­பலசேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் விரைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பார். இரு­வா­ரங்­களில் அவர் ஊடக சந்­திப்­பு­களில் வெளிப்­ப­டுவார் என அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலாந்த விதா­னகே தெரி­வித்தார்.

ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ரா­ஜித விஹா­ரையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் இன்னும் இரு வாரங்­களில் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுவார். தற்­கா­லத்தில் நாட்டில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் குறித்தும் பேசுவார்.

அவ­ருக்கு பெளத்த மதம் சார்ந்த கட­மைகள் பல உள்­ளன.  எனவே அவர் ஊடக சந்­திப்­பு­களில் கலந்து கொள்ள முடி­யாமல் உள்­ளது. இருப்­பினும் விரைவில் ஊட­கங்­க­ளுக்கு வருவார்.

எவ்­வா­றா­யினும் இன்று ஞான­சார தேரரின் நிலைப்­பாட்­டினை உணர்ந்து கொண்டு மா­நா­யக்க தேரர்கள் நாட்டின் தலை­வர்­களை அழைத்து பேசும் நிலைமை தோன்றியுள்ளதை பெளத்த மக்கள் அறிந்துள்ளனர் என்பது சிறப்பானதாகும் என்றார்.

Leave a comment