மல்லாவி பேரூந்து தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

245 0

ரூபா 6.4 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள மல்லாவி பேரூந்துதரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 10.07.2017 ம் திகதி மாலை 4.00மணியளவில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி   வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன்  அவர்கள்கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

தொடர்ந்து வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்அவர்களும் அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இன்நிகழ்வுக்குவடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி வர்த்தக வாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவபா.டெனீஸ்வரன்  வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்துணுக்காய் பிரதேச  செயலாளர்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதமபொறியியலாளர் மற்றும்  மல்லாவி வர்த்தக சங்கதலைவர் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தார்கள்.

Leave a comment