யாழ் சுண்டுக்குழியில் ஆசிரியையின் தாலிக்கொடி திருடர்களால் அறுப்பு

222 0

வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 10 பவுண் தாலிக்கொடியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த ஆசிரியை யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிப்பவர் என தெரியவருகின்றது. நேற்று பாடசாலை முடிந்து வீடுசென்றுகொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் சுண்டுக்குளி விதான்ஸ் லேன் பகுதியில் பி.ப. 2.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகல்வேளை இச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆசிரியை அவயக் குரல் எழுப்பியபோதும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை எனத் தெரியவருகின்றது.

Leave a comment