பளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

266 0

பளை – தர்மக்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த வி.ராஜ்குமார் (வயது-18) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டார்.

யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சமிக்ஞை கம்பத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment