மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள்

252 0

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர, ஏ.எல்.கிரான் குணரத்ன மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment