துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் – ஜனாதிபதி

292 0
துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெலிகந்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரவுள்ள சவால்கள் மற்றும் விமர்சனங்களுக்கு துணிச்சலாக முகம் கொடுத்து நாட்டுக்கும், மக்களுக்குமாக அரசாங்கத்தின் பயணம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டின் கைத்தொழிற்துறையினரை பலப்படுத்துவதற்காக பொலிசெக் உற்பத்திகளின் இறக்குமதியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் செய்யக்கூடியதாக இருந்தும் செய்யப்படாத பொலன்னறுவைக்கான வேலை திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்மூலம் எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டமும் இலங்கையின் அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களில் இணைந்து கொள்ளும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment