நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்புக்கு தமது ஆதரவை வழங்குவதாக சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் ராஜா கொல்லுரே, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் இருந்து ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் எனில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு பொதுசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படும் பட்சத்தில், மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டே வாக்குகளை வழங்குவார்களே தவிர, அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்தின் உள்ளடக்கத்தை வைத்து அல்லவென ராஜா கொல்லுரே குறிப்பிட்டுள்ளார்.