பெருந்தொகை சிகரெட்டுக்களுடன் வர்த்தகர் கைது

210 0

1,250,000 ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட் பெட்டிகள் 125 கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குவைத் நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த வர்த்தகர் ஒருவரே குறித்த சிகரெட்டுக்களை கொண்டு வந்ததாக, சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.

மேலும், சுங்கப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஆர்.மிஹிர பிரியரத்னவின் உத்தரவுக்கு அமைய, சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment