விரைவில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிரணியில்

206 0

வருங்காலத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிரணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment