பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழீழத்தின் கரும்புலிகள் தினம் முதன்முதலாக 05.07.2017 அன்று புதன் கிழமை மாலை 3.30 மணிக்கு நினைவு கூரப்பட்டது. இநந் நிகழ்வு எமது மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடாக அமைந்தது. முதல்நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழழீ உணர்வாளர்கள் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் மாவீரனின சகோதரி ஏற்றிவைத்தார்.
நிகழ்வில் மாவீரர்கள் நாட்டுப்பற்றாளரக் ள் மக்கள் ஆகியோருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு, தீபம் ஏற்றி மலரவ் ணக்கம் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நினைவுரைகளை நடராசா கிருபானந்தன், மத்தியுஸ் ஆகியோர் நிகழ்த்தினர், மாணவன் கரிஸ் அவர்களின் கவிதை, ஆசிரியர் ஜசோதா அவர்களின் கவிதையோடு ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.