வெளிநாட்டு நாணயத்துடன் இலங்கையர் கைது  

244 0

கட்டுநாயக்க வாநூர்தி நிலையத்தில் 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவர் இலங்கையில் இருந்து பாங்கொக் நோக்கி பயணிக்கவிருந்த வேளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க டொலர்கள், சுவிஸ் பிராங்ஸ் போன்ற வெளிநாட்டு பணங்கள் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment