கூட்டு எதிர்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – அமைச்சர் சரத் அமுனுகம

303 0

Sarath-amunugama-400-seithyகூட்டு எதிர்கட்சி தெரிவிப்பது போல், ஆளும் அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மல்வத்தை மஹாநாயக்கரை நேற்று சந்தித்ததன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அளும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பேராட்டம் என்று கூறிக்கொண்டு கூட்டு எதிர்கட்சியினர், கடந்த தினத்தில் பேரணி சென்றனர்.
எனினும் அந்த பேரணியில் வெறும் 15ஆயிரம் பேரே பங்குகொண்டதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மக்கள் நல்லாட்சியின் பக்கமே உள்ளனர் என்பதை இது காட்டுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.