முல்லைத்தீவு அதிகளவில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் -அரசாங்க அதிபர்

235 0

முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரவுகளில் 135 கிராம சேவகர் பிரிவுகள் பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரட்சியான சூழல் காரணமான சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதி;ப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களுக்கான குடிநீர் பயன்பாட்டுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment