இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை -இராணுவத் தளபதி

231 0

இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில குழுக்கள் இப்படியான உண்மைத்தன்மையற்ற வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம்.

எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அதனை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

Leave a comment