சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பிராந்திய வான்பரப்பில் இரண்டு அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் சீன கடல் பிராந்திய சீனாவின் கட்டுப்பாட்டினுள் உள்ள பகுதி அல்லவென இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீன தலைவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளனர்.
குறிப்பாக வடகொரியாவை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா எந்தவகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா கடந்த செவ்வாய் கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளது.
இந்த வகையான ஏவுகணை அமெரிக்க வட மேற்கு பசுபிக்வரை சென்று தாக்கக்கூடிய வலுவை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

