பல திருட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!

255 0

வட்டவளை பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் வட்டவளை டெம்பஸ்டோ தோட்ட தலைமை அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தே குறித்த இலத்திரனியல் உபகரணங்களை களவாடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாக குறித்த இரண்டு சந்தேகநபர்களும் அயல் பகுதிகளில் உள்ள வீடுகளிலும், தோட்ட அதிகாரியின் வீட்டிலும் களவுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் சில காலமாக தோட்ட அதிகாரியின் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிவானிடம் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment