ராஜபக்ஷாக்கள் திருடர்கள் இல்லை – ஒரேயொரு ஊழல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

23956 0

தம்மால் ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை முறியடித்தமையே அந்த செயற்பாடு எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அந்த செயற்பாட்டின் காரணமாக தம்மை சிறையில் அடைக்க வேண்டுமாயின் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார். இன்று (07) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், யுத்தத்தை கடந்த இறுதி ஐந்து வருடங்களி்ல் மாத்திரம் மேற்கொள்ளவில்லை எனவும், பதவியில் இருந்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இதன்பொருட்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனினும், கடந்த ஜனாதிபதியின் ஆட்சி காலத்திலேயே யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

யுத்தத்தை இறுதிசெய்யும் பணியை மாத்திரமே தாம் மேற்கொண்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும், ராஜபக்‌ஷாக்கள் நாட்டை களவாடவில்லை எனவும், இந்த காப்பாற்றியது ராஜபக்‌ஷாக்கள் என்பதை நினைவுபடுத்துவதாகவும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் அளவிற்கு தாம் சேவையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.