மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய் பரவும் வகையிலான 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் பல டெங்கு நோய் பரவும் வகையிலான இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த இடங்கள் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெங்கு நோய் பரவல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் அண்மையில் மூடப்பட்டதுடன், ஒரு மாணவி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.