இன்றைய தினம் அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் பதவி நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, ஜனாதிபதி புதிய செயலாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மேலதிக சட்டமா அதிபர் கபில் வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின், 22வது இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வெற்றிடமான கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.