நானுஓய சம்பவம் – கைதான 47 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

472 0

நானுஒயாவில் இடம்பெற்ற விபத்துக்கு பின்னரான வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 47 பேரையும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதிமன்ற நீதவான் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

இதன்படி அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி நானுஒயாவில் இடம்பெற்ற விபத்து காரணமாக சிறுமி ஒருவர் பலியானார்.

இதனையடுத்து, இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது, அரச சொத்துக்களுக்கும் காவற்துறையினரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரிலே குறித்த 47 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a comment