இலங்கையின் மொத்த வருமானத்தில் 350 மில்லியன் டொலர்கள் மேலதிகமாக காரணம் என்ன?

7557 0

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீள கிடைத்துள்ளமையானது, இலங்கையின் மொத்த வருமானத்தில் 350 மில்லியன் டொலர்களை மேலதிகமாக சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகையின் கீழ், இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற 6 ஆயிரத்து 200 உற்பத்திபொருட்கள் நன்மைப்பெற்றுக் கொள்ளவுள்ளன.

இது இலங்கைக்கு மேலதிகமாக 350 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத் தரவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment