பேரூந்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த பாடசாலை மாணவர் பலி!

253 0

ஹைலெவல் வீதியின் கொடகம சந்தியில் பேரூந்தொன்றில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய குறித்த மாணவர் பேரூந்தின் மிதிபலகையில் பயணித்துள்ள நிலையில் அதிலிருந்து தவறி வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த குறித்த மாணவர் ஹோமாகமை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் , நேற்று இரவு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

தும்மோதரை கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment