10 நா. உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரிக்கை!

232 0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துவெளியேறப் போவதாக எச்சரித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இடம்பெறும் சந்திப்பை அடுத்து அரசாங்கத்தில் இருந்து விலகதீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ( ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி) தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் வானொலி ஒன்றிடம்தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் திருப்திகரமாக அமையவில்லை. இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆட்சியை கொண்டு செல்ல இடமளிக்கப்படல் வேண்டும்,

அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிநிறுவப்படவேண்டும் என்ற கொள்கையில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன்இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment