பிரித்தானியரின் பொய்யான முறைப்பாடு

426 0

uk-flagகாப்புறுதி இழப்பீட்டை நோக்காக கொண்டு பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் காவற்துறையில் பொய்யான முறைப்பாடு ஒன்றை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கம்பளை பகுதியில் தாம் தங்யிருந்த விருந்தகம் ஒன்றில் தமது 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டதாக அவர் காவற்துறையில் முறைப்பாட்டை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தாம் இன்று நாட்டுக்கு திரும்ப உள்ள நிலையில் தமக்கு, தாம் மேற்கொண்ட காவற்துறை முறைப்பாட்டுக்கான பிரதியொன்றை தருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

முறைப்பாடையடுத்து குறித்த விருந்தகத்திற்கு சென்ற காவற்துறையினர் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது நகைகள் எவையும் திருடப்படவில்லை என கண்டறிந்தனர்.