மக்கள் மத்தியில் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்புவதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க கூடாது – மஹிந்த

237 0

மக்கள் மத்தியில் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்புவதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு இனவாதத்தை பரப்பி வருகிறது.

தமது இயலாமையை மறைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்படுகின்றன அனைத்து நெருக்கடி நிலைகளுக்கும் தாமே காரணமாக காட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment