தியதலாவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த போலி டொலர் நாணயத் தாள் அச்சிடும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து ஐந்தாயிரத்து 200 போலி டொலர் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கறுப்பு நிற கடதாசி வகையொன்றில் அச்சிட்டப்பட்டுள்ள டொலர் நாணயத்தாளில் ஒருவகையான இரசாயன திரவமொன்றை இடுவதன் ஊடாக அது டொலராக மாறுவதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவர் தெரிவித்துள்ளார்.