உமா ஓய வேலைதிட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

392 0
உமா ஓய வேலைதிட்டத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று இந்த கலந்துரையாடல், ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா ஓய வேலைதிட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், குறித்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை, உமா ஓய வேலைதிட்டத்தை முன் கொண்டு செல்வதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற எதிர்ப்பார்துள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment