பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் விழுந்து பலி

438 0

கலேவல – பம்பரகஸ்வேவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து நண்பர்களுடன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ள போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் விளையாடச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கிணற்றில் குறித்த சிறுவன் விழுந்ததையடுத்து சிறுவனின் நண்பர்கள், பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள நிலையில் பிரதேச மக்கள் அங்கு விரைந்துள்ளனர்.

பின்னர் அங்கு சென்று சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment