பி.எச் பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

412 0

tna-mp-piyasena-1அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவிர, பி.எச் பியசேனவின் சாரதி இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 3 லட்சம் ரூபா சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.