குப்பைக் கொட்டிய மேலும் 144 பேர் கைது

399 0

மேல்மாகாணத்தின் பல இடங்களில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய மேலும் 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக காவற்துறை நிலையங்கள் ஊடாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் குப்பைகளை கொட்டுபவர்களை கைதுசெய்வதற்காக காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சிறப்பு தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்க முன்னரும் இந்த குற்றச்சாட்டில் பலர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment