மாலபே மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்ற உத்தரவு

267 0

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை பிரதான நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோட்டை காவல்நிலையம் மற்றும் தொடரூந்து நிலையத்தின் பாதுகாப்பு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூடாரங்களினால் பாதசாரிகள் இடையூறு ஏற்படுவதாகவும் காவற்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

Leave a comment