புதிய அரசியல் யாப்பு தொடர்பான முக்கியத் தீர்மானம் அடுத்தவாரம் – ரணில்

364 0
புதிய அரசியல் யாப்பு தொடர்பான முக்கியத் தீர்மானம் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரசியல்யாப்பு தொடர்பான விளக்கமளிப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் யாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழு, அடுத்தவாரம் மீண்டும் ஒன்று கூடவுள்ளது.
இதன்போது, புதிய அரசியல் யாப்பில் கருத்துக் கணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய தேவையில்லாத விடயங்களை மட்டும் உள்ளடக்குவதா? அல்லது முழுமையான விடயங்களையும் உள்ளடக்குவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை ஒகஸ்ட் மாதம் முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment