அஞ்சல் பணியாளர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

321 0
இன்றைய தினமும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அஞ்சல் பணியாளர்களின் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹாலிமுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தமது போராட்டம் இன்றைய தினமும் தொடரும் எனவும் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க அஞ்சல் நிலையங்களை விருந்தக வேலைத்திட்டத்திற்கும், நிர்வாக பணிகளுக்கும் பெற்றுக்கொள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 26ஆம் திகதி தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தில் சுமார் 4 லட்சம் அஞ்சல்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment