இலங்கையில் உரிமைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை

565 0
இலங்கையில் உரிமைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார, சமுக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த குழுவின் வருடாந்தக் கூட்டத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இலங்கையில் பொருளாதார, சமுக மற்றும் கலாசார உரிமைகளும், மனித உரிமைகளும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே இந்த உரிமைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் உருவாக்கி நிறைவேற்ற வேண்டும் என்று அந்த குழு கோரிக்கைவிடுத்துள்ளது.

Leave a comment