இரணைத்தீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தீர்வு – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

330 0

இரணைத்தீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தீர்வு வழங்குவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் 60 நாட்களை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ராஜாங்க அமைச்சர் சந்தித்தபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களுள் தீர்வை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a comment