ஆட்கடத்தல்கள் விடயம் – இலங்கைக்கு அமெரிக்கா தர உயர்வு

213 0

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் படி, இலங்கையை அமெரிக்கா இரண்டாம் அடுக்குக்கு உயர்த்தியுள்ளது.

ஆட்கடத்தல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் கடந்த ஆண்டு இலங்கை பின்னிலையில் இருந்த போதும், இந்த ஆண்டு முன்னேற்றம் கண்டுள்ளது.

எனினும் இது போதுமானது இல்லை என்றும் ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment