சூழ்ச்சி செய்து அரசாங்கத்தில் இருந்து வெளியேற தமக்கு அவசியம் இல்லை – அருந்திக பெர்ணாண்டோ

294 0

சூழ்ச்சி செய்து அரசாங்கத்தில் இருந்து வெளியேற தமக்கு அவசியம் இல்லை என பிரதியமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவில் முன்னிலையானார்.

இதன்போது, ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்ளவே அவர் காவல்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் சுமார் 4 மணித்தியாலயம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment