குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் – முன்னாள் போராளிகள் இருவர் தெரிவிப்பு

224 0

தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் என முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் அவர்கள் இன்று இந்த அறிவிப்பை முன்வைத்துள்ளனர்.

அநுராதபுரம் வான் படை முகாமுக்கு வான் மற்றும் தரைவழியாக ஒரே சமயத்தில் தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போதே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அநுராதபுரம் வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலின் போது 16 வானூர்திகள் அழிவடைந்தன.

அத்துடன் 14 பாதுகாப்பு தரப்பினர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வான் படை முன்னாள் உறுப்பினர்களான பீ.அரவிந்தன் மற்றும் ராசவன்னன் தபோரூபன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment