மாலபே தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது

254 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது முன்வைக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சும் உயர்கல்வி அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த அறிக்கை தொடர்பாக தாம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தம்மால் முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவச சுகாதாரம் தொடர்பாக புரிந்துணர்வு இல்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment