இலங்கை கடல் வழியாக அதிகரித்துள்ள ஹெரோய்ன் கடத்தல்

316 0
தமிழகத்தில் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்துவதற்கு இலங்கையின் கடல் வழியை பயன்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
தமிழக அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தமிழக கடற்கரையின் 1067 கிலோமீற்றர் பரப்பை பயன்படுத்தி, இந்த கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடத்தல்காரர்களால், இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக ஹெரோய்ன், கொக்கெய்ன், கஞ்சா போன்ற பொருட்கள் மாற்று இடங்களுக்கு கடத்தப்படுகின்றன என்றும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment