20 இலங்கையர்களை நாடு கடத்திய அவுஸ்திரேலியா

9266 0
இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.
அண்மைக்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர் என்று  தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
எனினும் நாடு கடத்தப்பட்டவர்கள் எப்போது கடலில் வைத்து தடுக்கப்பட்டவர்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிடவில்லை

Leave a comment